2008
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இப்பதிவு ஒரு நிகழும் செய்திக் குறிப்பை பதிவு செய்கின்றது. இப்பதிப்பில் இடம்பெறும் தகவல்கள் திடீர், தொடர் மாற்றங்களுக்கு உள்ளாகலாம். |
நூற்றாண்டுகள்: | 20ம் நூ - 21ம் நூ - 22ம் நூ |
பத்தாண்டுகள்: | 1970கள் 1980கள் 1990கள் - 2000கள் - 2010கள் 2020கள் 2030கள் |
ஆண்டுகள்: | 2005 2006 2007 - 2008 - 2009 2010 2011 |
2008 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2008 MMVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 2039 |
சீன நாட்காட்டி | 4704-4705 |
எபிரேய நாட்காட்டி | 5767-5768 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2063-2064 1930-1931 5109-5110 |
இரானிய நாட்காட்டி | 1386-1387 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1428-1429 |
ரூனிக் நாட்காட்டி | 2258
|
2008 (MMVIII) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
தமிழ் நாட்காட்டி: ஏப்ரல் 12 வரை சர்வசித்து ஆண்டும், ஏப்ரல் 13 இலிருந்து சர்வதாரி ஆண்டும் ஆகும்.
திருவள்ளுவர் ஆண்டு: ஜனவரி 15 வரை 2038, ஜனவரி 16 இலிருந்து 2039.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
[தொகு] ஜனவரி 2008
- ஜனவரி 1 - மேற்கு கென்யாவில் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் கலவரங்களின் போது இடம்பெயர்ந்திருந்த 50 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 1 - சைப்பிரஸ், மால்ட்டா ஆகியன யூரோவை தமது அதிகாரபூர்வ நாணயங்ககளாக ஏற்றுக் கொண்டன.
- ஜனவரி 2 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.
- ஜனவரி 8 - கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 9 - இந்தியாவின் டாட்டா மோட்டர்ஸ் நிறுவனம் உலகின் விலை குறைந்த டாட்டா நனோ என்ற தானுந்து ஒன்றை அறிமுகப்படுத்தினர்.
- ஜனவரி 14 - நாசாவின் மெசஞ்சர் விண்கலம் புதன் கோளை அண்மித்தது. புதனை அண்மித்த இரண்டாவது விண்கலம் இதுவாகும்.
- ஜனவரி 16 - இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இலங்கையில் இருந்து வெளியேறினர்.
- ஜனவரி 16 - டஹினா ஸ்பெக்டாபிலிஸ் (Tahina spectabilis) என்ற பூத்தவுடனே இறக்கும் ஒரு தென்னை போன்ற தாவரம் வடக்கு மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 23 - கொங்கோ சனநாயகக் குடியரசு அரசுக்கும் ஹுரு இனப் போராளிக் குழுவிற்கும் இடையில் அமைதி உடன்படிக்கையொன்று எட்டப்பட்டது.
- ஜனவரி 29 - மன்னார் மாவட்டம் தட்சணாமருதமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 12 மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் ஜனவரி 2008 நிகழ்வுகளுக்கு..
[தொகு] பெப்ரவரி 2008
- பெப்ரவரி 2 - இலங்கையின் மாத்தளை மாவட்டம் தம்புள்ள என்ற இடத்தில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டு, 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
- பெப்ரவரி 3 - மேற்கு ருவாண்டாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 3 - கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டு 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 7 - நாசாவின் அட்லாண்டிஸ் விண்ணோடம் ஏழு விண்வெளி வீரர்களுடன் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது.
- பெப்ரவரி 11 - கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
- பெப்ரவரி 13 - ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் குழந்தைகளை 1869-1969 காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தமைக்காக ஆஸ்திரேலிய அரசு சார்பாக பிரதமர் கெவின் ரட் பொது மன்னிப்புக் கேட்டார்.
- பெப்ரவரி 17 - கொசோவோ நாடாளுமன்றம் சேர்பியாவிடமிருந்து ஒருதலைப் பட்சமாக விடுதலையாவதாக அறிவித்தது.
- பெப்ரவரி 19 - 51 ஆண்டுகள் கியூபாவின் ஜனாதிபதியாகவும் இராணுவத் தலைவராகவும் இருந்த பிடெல் காஸ்ட்ரோ தனது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- பெப்ரவரி 21 - விண்ணிலிருந்து பூமியை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு செய்மதியான யூஎஸ்ஏ 193ஐ அமெரிக்கக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் பூமிக்கு அதனால் எவ்வித ஆபத்தும் இனி இல்லை எனவும் அமெரிக்கா அறிவித்தது.
- பெப்ரவரி 24 - கியூபாவின் அதிபராக பிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவூல் காஸ்ட்ரோ தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் பெப்ரவரி 2008 நிகழ்வுகளுக்கு..
[தொகு] மார்ச் 2008
- மார்ச் 6 - வன்னி கனகராயன்குளம் பகுதியில் நடந்த கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் கொல்லப்பட்டார்.
- மார்ச் 11 - என்டெவர் விண்ணோடம் அனைத்துலக விண்வெளி மையத்தை நோக்கி ஏவப்பட்டது.
- மார்ச் 15 - சீனாவின் திபெத் சுயாட்சிப் பிரிவில் திபெத்தின் விடுதலையை வேண்டி ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது காவல்துறையினர் சுட்டதில் 30 முதல் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- மார்ச் 16 - இரண்டாம் உலகப் போரின் போது 1941 ஆம் ஆண்டு மூழ்கிய ஜேர்மானியப் போர்க்கப்பலான கோர்மொரான் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.
- மார்ச் 17 - இரண்டாம் உலகப் போரின் போது 645 கடற்படையினருடன் மூழ்கடிக்கப்பட்ட எச்.எம்.ஏ.எஸ். சிட்னி என்ற ஆஸ்திரேலியப் போர்க்கப்பல் 65 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 22 - முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் அதிவேக டோறா பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டதாக அரசு தெரிவித்தது.
- மார்ச் 23 - ஈராக் போரில் இறந்த ஐக்கிய அமெரிக்க போர் வீரர்களின் எண்ணிக்கை 4,000 ஐ எட்டியது.
- மார்ச் 27 - 1860 ஏப்ரல் 9 இல் போனாட்டோகிராஃப் மூலம் எடுவார்ட்-லெயோன் மார்ட்டின்வில் என்பவரினால் பதியப்பட்ட மனிதக் குரல் ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
மேலும் மார்ச் 2008 நிகழ்வுகளுக்கு..
[தொகு] ஏப்ரல் 2008
- ஏப்ரல் 4 - மன்னார், மடு அன்னை திருவுருவச் சிலை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டது.
- ஏப்ரல் 6 - இலங்கை, கம்பகாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டார்.
- ஏப்ரல் 8 - ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சில் சார்க் தீவில் நிலமானிய அமைப்பை மாற்றி மக்களாட்சி முறைக்கு அங்கீகாரம் வழங்கியது.
- ஏப்ரல் 8 - ரஷ்யாவின் சோயூஸ் டீஎம்ஏ விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. முதன் முதலில் ஒரு கொரிய விண்வெளி வீரர் விண்ணுக்கு செல்வது இதுவே முதற் தடவையாகும்.
- ஏப்ரல் 14 - 43 ஆண்டுகளின் பின்னர் வங்காள தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- ஏப்ரல் 14 - நேபாளத்தில் 9 ஆண்டுக்கு பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நேபாள மாவோயிஸ்டுகள் பெரும்பான்மையைப் பெற்றனர்.
- ஏப்ரல் 20 - வட கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் வண. கருணாரத்தினம் அடிகள் வன்னியில் அம்பல்குளம் என்ற இடத்தில் கிளைமோர்த் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.
- ஏப்ரல் 23 - கிளாலி முதல் முகமாலை வரை 7 கிமீ முன்னரண் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு படையினர் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 25 - கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பேருந்து ஒன்றினுள் குண்டு வெடித்ததில் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 52 பேர் படுகாயமடைந்தனர்.
- ஏப்ரல் 27 - மணலாறு இராணுவ முகாம்களின் மீது வான்புலிகள் விமானத் தாக்குதலை மேற்கொண்டனர்.
- ஏப்ரல் 28 - பத்து செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-சி9 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.
மேலும் ஏப்ரல் 2008 நிகழ்வுகளுக்கு..
[தொகு] மே 2008
- மே 4: சூறாவளி நர்கிஸ் பர்மாவைத் தாக்கியதில் குறைந்தது 22,000 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 7 - 3,000 கிமீ தூரம் செல்லக்கூடிய அக்னி 3 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்தது.
- மே 9: ஹெஸ்புல்லா இயக்கம் லெபனானின் பெய்ரூட் நகரின் பெரும் பகுதியைக் கைப்பற்றியது.
- மே 9 - அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு நிகழ்வில் 13 பேர் கொல்லப்பட்டு, 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- மே 10: திருகோணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட நிலையில் இலங்கைப் படையினரின் ஏ-520 என்ற வழங்கல் கப்பல் கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
- மே 12: சீனாவின் சிச்சான் மாநிலத்தின் வென்சுவா மாவட்டத்தில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 70,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- மே 16 - கொழும்பு மத்தியில் வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 7 காவல்துறையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டு 90 பேர் காயமடைந்தனர்.
- மே 13: ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள்: இந்திய நகரமான ஜெய்ப்பூரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டு 180 பேர் காயமடைந்தனர்.
- மே 16 - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
- மே 18: மன்னார், கருங்கண்டல்குளம் அணை ஊடாக வண்ணாங்குளம் நோக்கி இலங்கைப் படையினர் மேற்கொண்ட நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- மே 23 - கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- மே 23: பத்து பூத்தே தீவு (Pedra Branca) மீதான அரசுரிமையை அனைத்துலக நீதிமன்றம் சிங்கப்பூருக்கு வழங்கியது. சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் இருந்த 28 ஆண்டுக்கால சர்ச்சை முடிவுக்கு வந்தது. இத்தீவுக்குச் சற்றுத் தள்ளியுள்ள இரண்டு சிறிய தீவுத்திட்டுகள் - மிடல் ரோக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகியவை மலேசியாவுக்குச் சொந்தமானவை என முடிவு செய்தது.
- மே 26: கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டு 73 பேர் படுகாயமடைந்தனர்.
- மே 28: யாழ்ப்ப்பாண நகரில் நாவாந்துறையில் ஊடகவியலாளர் பி. தேவகுமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- மே 29 - யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினரால் தாக்கியழிக்கப்பட்டதில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
மேலும் மே 2008 நிகழ்வுகளுக்கு..
[தொகு] இறப்புகள்
- ஜனவரி 1 - தியாகராஜா மகேஸ்வரன், கொழும்பு நாடாளுமன்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்
- ஜனவரி 10 - பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஜனவரி 11 - எட்மண்ட் ஹில்லரி, நியூசிலாந்து மலையேறி (பி. 1919)
- ஜனவரி 15 - கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938
- ஜனவரி 17 - பொபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க வீரர் (பி. 1943)
- ஜனவரி 22 - ஹீத் லெட்ஜர்,, ஹாலிவுட் நடிகர் (பி. 1979)
- ஜனவரி 27 - சுகார்ட்டோ, இந்தோனீசியாவின் 2வது அதிபர் (பி. 1921)
- ஜனவரி 28 - செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர்
- பெப்ரவரி 2 - ஜோசுவா லெடர்பேர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1925)
- பெப்ரவரி 5 - மகரிஷி மகேஷ் யோகி, ஆன்மிகக் குரு
- பெப்ரவரி 7 - குணால், தமிழ் திரைப்பட நடிகர்
- பெப்ரவரி 20 - டி. ஜி. எஸ். தினகரன், கிறிஸ்தவ மதபரப்புனர் (பி. 1935)
- பெப்ரவரி 27 - சுஜாதா, எழுத்தாளர் (பி. 1935)
- மார்ச் 6 - கி. சிவநேசன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் (பி. 1957)
- மார்ச் 16 - அநுரா பண்டாரநாயக்கா, இலங்கைஅமைச்சர் (பி. 1949)
- மார்ச் 19 - ஆர்தர் சி. கிளார்க், ஆங்கில அறிவியல் புதின எழுத்தாளர் (பி. 1917)
- மார்ச் 19 - ரகுவரன், தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஏப்ரல் 6 - ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, இலங்கை அமைச்சர் (பி. 1953)
- மே 20 - பால்ராஜ், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பி. 1965)
- ஜூன் 6 - ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)
- ஜூன் 15 - தங்கம்மா அப்பாக்குட்டி, ஈழத்தின் ஆன்மிகவாதி (பி. 1925)