அக்டோபர் 22
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 22 கிரிகோரியன் ஆண்டின் 295வது நாளாகும். நெட்டாண்டுகளில் 296வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 70 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- கிமு 4004 - அங்கிலிக்கப் பேராயர் ஜேம்ஸ் உச்சரின் கணிப்பின் படி அகிலம் படைக்கப்பட்டது.
- 362 - அந்தியோக்கியாவின் "அப்பலோ" ஆலயம் தீப்பற்றி எரிந்தது.
- 794 - கன்மு பேரரசர் ஜப்பானிய தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோட்டோ) மாற்றினார்.
- 1383 - போர்த்துக்கல் மன்னன் பேர்டினண்ட்டின் இறப்பின் பின்னர் ஆண் வாரிசு அற்ற நிலையில் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- 1692 - மந்திரம் செய்ததற்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்பட்ட கடைசி தூக்கு தண்டனை.
- 1784 - இரசியா அலாஸ்காவின் கொடியாக் தீவில் குடியேற்றமொன்றை அமைத்தது.
- 1797 - பதிவுச் செய்யப்பட்ட முதலாவது பரசூட் பாய்ச்சல் அன்ட்ரே ஜக்கியுஸ் கர்னெரின் என்பவரால் பரிஸ் நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.
- 1844 - பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம் மில்லரின் படிப்பினைகளைக் பின்பற்றிய மில்லரிய கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர்.
- 1866 - பராகுவே: பிரேசில், ஆர்ஜென்டீனா, உருகுவேக்கு எதிரான குருப்பட்டி போர்.
- 1875 - ஆர்ஜென்டீனாவுக்கான முதலாவது டெலிகிராப் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
- 1877 - ஸ்கொட்லாந்தில் பிளான்டையர் சுரங்க விபத்து, 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
- 1878 - செயற்கை ஒளிக்கு கீழ் நடைப்பெற்ற முதலாவது ரக்பி போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைப்பெற்றது.
- 1924 - சர்வதேச டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் காசெல் நகரம் மீது பிரித்தானிய விமானப்படை குண்டுவீச்சு 10,000 பேர் பலி மற்றும் 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
- 1946 - அல்பேனியாவின் கரைக்கு அப்பால் பிரித்தானிய போர்க் கப்பல் கண்ணிவெடியில் சிக்கியதால் 40 பிரித்தானிய கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
- 1949 - சோவியத் ஒன்றியம் அதன் முதலாவது அணுகுண்டை வெடிக்கச் செய்தது.
- 1953 - லாவோஸ், பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1956 - பாகிஸ்தான், கராச்சியில்]] கான்கிரீட் கூரைப் பாகம் வீழ்ந்ததில் 48 பேர் பலி.
- 1957 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு.
- 1960 - மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1964 - பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவுச் செய்தது.
- 1965 - இந்தியா-பாகிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
- 1970 - துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
- 1987 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின் உலங்குவானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.
- 2001 - PSLV C-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
[தொகு] பிறப்புக்கள்
- 1828 - ஜான்சிராணி லட்சுமிபாய், விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1858)
- 1919 - டோரிஸ் லெஸ்சிங், 2007 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர்
[தொகு] இறப்புகள்
- 1925 - அ. மாதவையா, தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் (பி.1872)