ஏப்ரல் 22
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஏப்ரல் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMVIII |
ஏப்ரல் 22 கிரிகோரியன் ஆண்டின் 112ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 113ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 253 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1500 - பிரேசிலைக் கண்ட முதல் ஐரோப்பியர் போர்த்துக்கீசரான பேதுரோ கப்ரால்.
- 1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெஞ்சமின் கிரியெர்சன் தலைமையில் நடு மிசிசிப்பியைத் தாக்கினர்.
- 1889 - நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி (Guthrie) ஆகியவற்றில் 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.
- 1898 - அமெரிக்க கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு ஸ்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.
- 1912 - ரஷ்யாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை ப்ராவ்டா சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது.
- 1915 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஈப்ர (Ypres) ஜெர்மனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஒல்லாந்தியா என்ற இடத்தில் தரையிறங்கினர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: குரோவேசியாவில் ஜசெனோவாச் வதை முகாம் கைதிகள் சிறையுடைப்பில் ஈடுபட்டபோது 520 கைதிகள் கொல்லப்பட்டனர். 80 பேர் தப்பியோடினர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
- 1970 - முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது.
- 1983 - ஹிட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற ஜெர்மனிய இதழ் அறிவித்தது.
- 1992 - மெக்சிக்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 206 பேர் கொல்லப்பட்டு 500 பேர் வரையில் படுகாயமுற்றனர்.
- 1997 - அல்ஜீரியாவில் கெமிஸ்ரி என்ற இடத்தில் 93 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1997 - பெருவின் தலைநகர் லீமாவில் ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் 126 நாட்களாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 71 பேர் அரசுப் படைகளின் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
- 2000 - ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.
- 2004 - வட கொரியாவில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - நேபாளத்தில் மன்னருக்கெதிராக கலகத்தில் ஈடுபட்ட மக்களாட்சிக்கு ஆதரவானோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 243 பேர் காயமுற்றனர்.
- 2006 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1724 - இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவவியலாளர் (இ. 1804)
- 1870 - விளாடிமிர் லெனின், ரஷ்யப் புரட்சியாளர், லெனினிசம் என்ற கோட்பாட்டின் நிறுவுனர் (இ. 1924)
- 1876 - ரொபேர்ட் பாரானி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1936)
- 1909 - ரீட்டா லெவி-மொண்டால்சினி, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர்
- 1919 - டொனால்ட் கிராம், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 2001)
- 1940 - க. சட்டநாதன், ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர்
[தொகு] இறப்புகள்
- 1994 - ரிச்சார்ட் நிக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 37வது அதிபர் (பி. 1913)