மார்ச் 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
மார்ச் 20 கிரிகோரியன் ஆண்டின் 79ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 80ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- கிமு 44 - ஜூலியஸ் சீசரின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
- 1602 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.
- 1616 - சேர் வால்ட்டர் ரலி 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் லண்டனில் விடுவிக்கப்பட்டார்.
- 1739 - நாதிர் ஷா டில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.
- 1760 - பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.
- 1815 - எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி "நூறு நாட்கள்" ஆட்சியை ஆரம்பித்தான்.
- 1861 - மேற்கு ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.
- 1916 - அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
- 1934 - ஜப்பானில் ஹாக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்து சுமார் 2,165 பேர் கொல்லப்பட்டனர்.
- 1942 - போலந்தில் ஸ்ஜியேர்ஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1942 - மேற்கு உக்ரேனில் ரொஹார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினார் கொல்லப்பட்டனர்.
- 1948 - சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
- 1953 - இலங்கையைச் சேர்ந்த நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக்கடந்தார்.
- 1956 - பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
- 1974 - லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
- 1988 - எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.
- 1995 - டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 12 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.
- 2003 - ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- 1828 - ஹென்ரிக் இப்சன் நார்வே நாட்டவர், நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் (இ. 1906).
- 1911 - அல்போன்சோ ரோபில்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1991)
- 1987 - கங்கனா ரனாத், திரைப்பட நடிகை
[தொகு] இறப்புக்கள்
- 1993 - பொலிகிராப் கூஷ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (பி. 1911)