நவம்பர் 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 322வது நாளாகும். நெட்டாண்டுகளில் 323வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 43 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1421 - நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
- 1477 - இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான "Dictes அல்லது Sayengis of the Philosophres" என்ற நூல் வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து.
- 1493 - கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோவை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
- 1863 - டென்மார்க்கின் மன்னன் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல் ஜேர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
- 1903 - பனாமா கால்வாய்ப் பகுதிக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கு தனிப்பட்ட அதிகாரம் வழங்கும் உடன்படிக்கை பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
- 1909 - நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
- 1918 - லாத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1926 - ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை ஏற்க மறுத்தார்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில் குந்துகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப்பட்டன.
- 1943 - உக்ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள் நாசிப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
- 1978 - கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
- 1987 - லண்டனில் சுரங்கத் தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
- 1989 - கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
- 2006 - ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1845 - மகிந்த ராஜபக்ச, இலங்கையின் 6வது ஜனாதிபதி
[தொகு] இறப்புகள்
- 1936 - வ. உ. சிதம்பரம்பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், (பி. 1872)
- 1952 - போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1895)
- 1962 - நீல்ஸ் போர், இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885)