ஏப்ரல் 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஏப்ரல் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMVIII |
ஏப்ரல் 13 கிரிகோரியன் ஆண்டின் 103ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 104ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 262 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1111 - ஐந்தாம் ஹென்றி புனித ரோம் பேரரசின் மன்னனாக முடி சூடினான்.
- 1605 - ரஷ்யாவின் சார் மன்னன் பொரிஸ் குடுனோவ் மரணமானான். இரண்டாம் ஃபியோதர் சார் மன்னனானான்.
- 1829 - பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது.
- 1849 - ஹங்கேரி நாடு குடியரசானது.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: சம்ட்டர் கோட்டை அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தது.
- 1868 - பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள் மக்டாலாவைக் கைப்பற்றியதில் அபினீசியப் போர் முடிவுக்கு வந்தது.
- 1873 - ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 105 கறுப்பினத்தவரும் 3 வெள்ளையினத்தவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலை: அம்ரித்சரில் ஜாலியன்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.
- 1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.
- 1939 - இந்தியாவில் இந்திய செம்படை என்ற இராணுவ அமைப்பு பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
- 1941 - ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக ஜெர்மனி அறிவித்தது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் கார்டெலகான் என்ற இடத்தில் ஆயிரம் போர் மற்றும் அரசியல் கைதிகள் நாசிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1953 - இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.
- 1954 - காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
- 1970 - அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்தது.
- 1974 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்டது.
- 1975 - லெபனானில் 27 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- 1979 - இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1984 - இந்தியா காஷ்மீரின் சியாச்சென் கிளேசியரை ஆக்கிரமித்தது.
- 1987 - மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்தானது.
- 1997 - டைகர் வூட்ஸ் கோல்ஃப் மாஸ்ரர்ஸ் வென்ற இளம் வீரரானார்.
- 2006 - கூகிள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 2007 - பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
[தொகு] பிறப்புகள்
- 1743 - தோமஸ் ஜெபர்சன், மூன்றாவது அமெரிக்க அதிபர் (இ. 1826)
- 1906 - சாமுவேல் பெக்கெட், நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் எழுத்தாளர் (இ. 1989)
- 1930 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1959)
- 1934 - டேம் ஜேன் குட்டால், சிம்பன்சி பற்றி ஆராய்ந்த ஆங்கிலேயப் பெண்மணி
- 1939 - சீமுஸ் ஹீனி, நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் எழுத்தாளர்
- 1941 - மைக்கல் பிரௌன், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
- 1963 - காரி காஸ்பரோவ், ரஷ்ய சதுரங்க ஆட்டக்காரர்.
- 1979 - பேரன் டேவிஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்