செப்டம்பர் 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 5 கிரிகோரியன் ஆண்டின் 248வது நாளாகும். நெட்டாண்டுகளில் 249வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 117 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1799 - பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
- 1800 - மோல்டா பிரித்தானியாவினால் பிடிக்கப்பட்டது.
- 1882 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூ யோர்க்கில் இடம்பெற்றது.
- 1902 - இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடயில் 14 மைல் நீளமான தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது.
- 1961 - அணிசேரா நாடுகளின் முத்லாவது மாநாடு பெல்கிறேட்டில் இடம்பெற்றது.
- 1972 - ஜேர்மனியில் மியூனிக்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இஸ்ரேலிய வீரர்களின் மீது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
- 1986 - அமெரிக்க பான் ஆம் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.
- 1990 - மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1872 - வ. உ. சிதம்பரம் பிள்ளை (இ. 1938)
- 1888 - சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1975)
- 1945 - கவிஞர் மு. மேத்தா
[தொகு] இறப்புகள்
- 1997 - அன்னை தெரேசா, (பி 1910)