மார்ச் 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
மார்ச் 19 கிரிகோரியன் ஆண்டின் 78ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 79ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 287 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1279 - யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியாவின் வெற்றியுடன் சீனாவில் சோங் அரச பரம்பரை முடிவுக்கு வந்தது.
- 1861 - நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது.
- 1915 - புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.
- 1918 - நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.
- 1932 - சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: நாசி படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றினர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் யூஎஸ்எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
- 1972 - இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
- 1982 - போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.
- 1988 - இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
- 2002 - ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
- 2004 - தாய்வான் பிரதமர் சென் ஷூயி-பியான் சூட்டுக் காயப்படுத்தப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1883 - வால்டர் ஹவேர்த், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர் (இ. 1950)
- 1900 - பிரெடெரிக் ஜோலியோட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1958)
- 1943 - மரீயோ மொலீனா, நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர்
[தொகு] இறப்புக்கள்
- 1950 - எட்கார் பரோஸ், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1875)
- 1950 - வால்டர் ஹவேர்த், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர் (பி. 1883)
- 2008 - ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் புதின எழுத்தாளர் (பி. 1917)
- 2008 - ரகுவரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1948)