செப்டம்பர் 11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 254வது நாளாகும். நெட்டாண்டுகளில் 255வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 111 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1297 - ஸ்டேர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வில்லியம் வொல்லஸ் தலைமையிலான ஸ்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.
- 1541 - சிலியின் சண்டியாகோ நகரம் மிச்சிமாலொன்கோ தலைமையிலான ஆதிவாசிகளினால் அழிக்கப்பட்டது.
- 1708 - சுவீடனின் சுவீடனின் 12வது சார்ள்ஸ் மன்னன் தனது மொஸ்கோவின் மீதான படையெடுப்பை ஸ்மொலியென்ஸ்க் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன.
- 1889 - யாழ்ப்பாணத்தில் த ஹிண்டு ஓர்கன் (The Hindu Organ) என்ற ஆங்கிலப் பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
- 1914 - ஆஸ்திரேலியா நியூ பிரிட்டன் தீவை ஆக்கிரமித்து அங்கிருந்த ஜேர்மனியரை வெளியேற்றினர்.
- 1916 - கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
- 1919 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஹொண்டுராசை ஆக்கிரமித்தனர்.
- 1926 - பெனிட்டோ முசோலினி மீதான கொலைத்தாக்குதல் தோல்வியடைந்தது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பக்கிங்ஹாம் அரண்மனை ஜேர்மனியினரின் வான் தாக்குதலில் சேதமடைந்தது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..
- 1945 - இரண்டாம் உலகப் போர்: போர்ணியோ தீவில் ஜப்பானியரினால் அடைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆஸ்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15இல் கொல்லப்படவிருந்தனர்.
- 1961 - டெக்சாசை 4ம் மட்ட சூறாவளி கார்லா தாக்கியது.
- 1973 - சிலியின் சனநாயக அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. சனாதிபதி சல்வடோர் அலெண்டே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் ஆகுஸ்டோ பினொச்சே ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.
- 1989 - ஹங்கேரிக்கும் ஆஸ்திரியாவுக்குமான எல்லை திறந்து விடப்பட்டதில் ஆயிரக்கணக்கான கிழக்கு ஜேர்மனி மக்கள் தப்பியோடினர்.
- 1992 - ஹவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.
- 2001 - நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- 1982 - ஷ்ரியா சரண், தென்னிந்திய நடிகை
[தொகு] இறப்புகள்
- 1921 - சுப்பிரமணிய பாரதியார், (பி. 1882)
- 1948 - முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் தாபகர்
- 1971 - நிகித்தா குருஷேவ், சோவியத் ஒன்றியத் தலைவர் (பி. 1894)
- 1973 - சல்வடோர் அலெண்டே, சிலியின் அதிபர் (பி. 1908)