அராலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அராலி் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
அமைவிடம் | |
கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை |
அராலி யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் ஒரு முக்கோண வடிவான கிராமமாகும். இது வட்டுக்கோட்டைத் தொகுதியின் அல்லது கோவிற்பற்றின் ஓர் உபபிரிவாகும்.
பொருளடக்கம் |
[தொகு] பெயர்க் காரணம்
முற்காலத்தில் அராலியில் 'ஆறா' எனும் ஒருவகை மீன் அதிகமாகக் கிடைத்ததாலோ இன்றும் இவ்வூரில் அதிகமாகக் காணப்படும் அரளிச் செடிகள் அதிகமாக இருந்ததாலோ 'அராலி' என்னும் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.
[தொகு] அராலியின் பிரிவுகள்
அராலிக் கிராமம் அராலி கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு பிரிவிகளாக பண்டைக்காலம் தொட்டே பிரிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து செல்பவர்கள் முதலில் காண்பது அராலிப் பாலத்தையும் வழுக்கையாற்றையுமே. அராலிப்பாலம் யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகருக்குக் கடற்கரையோரமாகச் செல்லும் வீதியில் ஐந்தாவது மைல் இறுதியிலே அமைந்துள்ளது.
வழுக்கையாறு தெல்லிப்பழைப் பகுதியில் ஆரம்பித்து, மல்லாகம், அளவெட்டியூடாகப் பாய்ந்து, சண்டிலிப்பாயைத்) தாண்டி அராலிக் கடலை நோக்கி ஓடிவருகிறது. அராலிப் பாலத்தின் அருகே அமைந்திருக்கும் சந்தியிலிருந்து தெற்கு நோக்கி இரண்டு மைல் தூரம் போனால் அராலித் துறைமுகத்தையடையலாம்.
[தொகு] அராலியில் அமைந்துள்ள கோயில்கள்
- அராலி முத்துமாரியம்மன் கோயில்
- அராலி கரைப்பிட்டி விநாயகர் கோயில்
- அராலி ஏரம்ப விநாயகர் கோயில்
- அராலி வடக்கு முருகமூர்த்தி கோயில்
- அராலி வடக்கு சிவன் கோயில்
[தொகு] இங்கு பிறந்த புகழ் பூத்தோர்
- இராமலிங்க முனிவர் (1649)
- அராலி முத்துக்குமாருப் புலவர் (1827)
- விஸ்வநாத சாத்திரியார்
- அ. வைத்திலிங்கம், உரும்பிராய் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்களில் ஒருவர்
- பா. அகிலன், ஈழத்தின் புதுக்கவிதையாளர்.
- வெ. சு. நடராசா, எழுத்தாளர்.
[தொகு] உசாத்துணை
- வெ. சு. நடராசா, ஆலயங்கள் மலிந்த அராலிக் கிராமம், ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த தொடர் கட்டுரை
[தொகு] வெளி இணைப்புகள்