கிளைமோர்த் தாக்குதலில் பேரூந்து சிக்கி 11 மாணவர் மரணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மன்னார் மாவட்டம் தட்சணாமருதமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டு, மேலும் 9 மாணவர்கள் உள்ளிட்ட 18 பேர் படுகாயமடைந்தனர். இந்நிகழ்வு செவ்வாய், ஜனவரி 29 2006 அன்று மணி 2.25 பி.ப இடம்பெற்றது. [1] இந்தக் தாக்குதலை இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் தாக்குதல் அணி நடத்தியதாக புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இராணுவம் இந்த நிகழ்வுக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என்று தெரிவித்து உள்ளது.[2]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24462
- ↑ Children die in S Lanka bus blast - பிபிசி