டி. ஜி. எஸ். தினகரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டி.ஜி.எஸ்.தினகரன் | |
---|---|
பிறப்பு | ஜூலை 1 1935 (அகவை -73) சுரந்தை, தமிழ்நாடு |
இறப்பு | 2008 பெப்ரவரி 20 சென்னை |
பணி | மறைபரப்புனர் |
துணை | ஸ்டெல்லா தினகரன் |
டி. ஜி. எஸ். தினகரன் (ஜூலை 1, 1935 - பெப்ரவரி 20, 2008) (சுரந்தை, தமிழ்நாடு) அல்லது துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் அமைப்பாளரும் இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் காருன்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவார். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ மதபிரசாரம் செய்தார். இவரது ஜெபத்தால் லட்சக் கணக்கானோர் பயன் பெற்றுள்ளனர். மற்றவர்களுக்காக கடவுளிடம் வேண்டுவதற்காக ஜெபகோபுரம் என்ற அமைப்பையும் நடத்தி வந்தார்.
பொருளடக்கம் |
[தொகு] குழந்தைப்பருவம்
துரைசாமி, எப்சிபா தம்பதிகளுக்கு ஒரே மகனாக தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் தினகரன் பிறந்தார். இவரது தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர் ஆவர், தாய் எப்சிபா வீட்டுமனைவியாக இருந்தார். குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. தாயார் குணப்படுத்தப்பட முடியாத நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டு வந்தார்.
[தொகு] இயேசுவை ஏற்றல்
வாலிபராயிருந்தபோது வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் காரணமாக 1955 பெப்ரவரி 11 அன்று தற்கொலை எண்ணத்துடன் தொடருந்துப் பாதைக்கு சென்றார். செல்லும் வழியில் காவல்துறையில் வேலை செய்த தனது சித்தப்பாவை சந்தித்தார். கடவுள் பக்தி நிறைந்த அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும், தினகரனுடைய உள்ளத்தில் அளவில்லாத விசுவாசத்தை ஏற்படுத்தியது. அவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாற்றப்பட்டது. அகமகிழ்வுடன் வீட்டிற்குச் சென்றார். முழங்காற்படியிட்டு இயேசுவை வணங்கத் தொடங்கினார்.
[தொகு] இறப்பு
நீண்ட நேரம் முழங்கால் படியிட்டு ஜெபம் செய்யும் பழக்கம் கொண்டவர் தினகரன். இதனால் இவரது மூட்டுகள் பாதிக்கப்பட்டன. நீண்ட நாள் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு குணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு சளித் தொல்லை மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2008 பெப்ரவரி தொடக்கத்தில் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் தினகரனுக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தது. சிகிச்சை பலனின்றி 20.2.2008 அன்று காலை 6 மணிக்கு தனது 73வது அகவையில் தினகரன் மரணம் அடைந்தார்.
[தொகு] கருணாநிதி அஞ்சலி
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த டி.ஜி.எஸ். தினகரன் உடலுக்குத் தமிழக முதல்வர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்த போது கருணாநிதி, “கிறிஸ்தவ மதத்தில் புகழ் பெற்ற போதகராக இருந்த டி.ஜி.எஸ். தினகரன் மறைந்த செய்தி அவருடன் நீண்ட காலம் நட்பும் தொடர்பும் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. டி.ஜி.எஸ். தினகரனுடைய குரலைக் கேட்பதற்காக லட்சக் கணக்கான மக்கள் கூடுவார்கள். இன்று அந்த மக்கள் எல்லாம் விம்மி அழும், வேதனையில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர் மறைந்து விட்டாலும் அவருடைய புகழ் என்றென்றும் நம் உள்ளங்களில் நிலைத்து நிற்கும்” என்று கூறினார்.