1869
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1830கள் 1840கள் 1850கள் - 1860கள் - 1870கள் 1880கள் 1890கள் |
ஆண்டுகள்: | 1866 1867 1868 - 1869 - 1870 1871 1872 |
1869 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1869 MDCCCLXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1900 |
சீன நாட்காட்டி | 4565-4566 |
எபிரேய நாட்காட்டி | 5628-5629 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1924-1925 1791-1792 4970-4971 |
இரானிய நாட்காட்டி | 1247-1248 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1289-1290 |
ரூனிக் நாட்காட்டி | 2119
|
1869 (MDCCCLXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- மார்ச் 6 - திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்.
- மே 20 - யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை (telegraph line) பூர்த்தியடைந்தது.
- மே 29 - பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.
- ஜூன் 18 - இலங்கையின் நாணயம் அரசாங்கக் கட்டளை ஒன்றின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டது. இதன்படி, இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
- ஜூலை 13 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
- அக்டோபர் 1 - உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.
- நவம்பர் 4 - நேச்சர் அறிவியல் இதழின் முதலாவது இதழ் வெளிவந்தது.
- நவம்பர் 17 - எகிப்தில் சூயஸ் கால்வாய் திறந்து வைக்கப்பட்டது.
[தொகு] தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- பிரித்தானிய நாடாளுமன்றம் அவுஸ்திரேலியாவுக்கு கைதிகளை அனுப்பும் நடைமுறையை நிறுத்தியது.
[தொகு] பிறப்புகள்
- அக்டோபர் 2 - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, (இ. 1948)