கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆகஸ்ட் 7 கிரிகோரியன் ஆண்டின் 219வது நாளாகும். நெட்டாண்டுகளில் 220வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 146 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1832 - இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
- 1898 - யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1906 - கல்கத்தாவில் Anti Circular Society என்னும் போராட்டக் குழுவின் தொண்டர்கள் முதல் தேசியக் கொடியை உருவாக்கினார்கள். பார்சி பகான் சதுக்கத்தில் இது ஏற்றப்பட்டது.
- 1933 - ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1991 - உலகளாவிய வலை (World Wide Web) மக்கள் மயப்படுத்தப்பட்டது.
- 1998 - தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்க தூதராலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 2006 - இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புகள்