ஜூன் 2008
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இக்கட்டுரை வருங்காலத்தில் இடம்பெறக்கூடிய நிகழ்வுகளைத் தருகிறது. இவை தற்காலிகமானவை. நிகழ்வு அண்மிக்கும் போது இவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். |
<< | ஜூன் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVIII |
ஜூன் 2008, 2008 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆனி மாதம் ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஜூலை 15 செவ்வாய்க்கிழமையில் முடிவடைகிறது.
[தொகு] சிறப்பு நாட்கள்
- ஜூன் 7 - சேக்கிழார் குருபூசை
- ஜூன் 13 - புனித அந்தோனியார் திருநாள்
[தொகு] நிகழ்வுகள்
செய்திகள் | மேலதிகச் செய்திகளை |
- ஜூன் 20:
- ஜூன் 18:
- ஜூன் 17:
- உலகின் அகதிகள் எண்ணிக்கை 2006 இல் 9.9 மி ஆக இருந்த உலக அகதிகளீன் எண்ணிக்கை 2007 இல் 11.4மி ஆக அதிகரித்திருப்பதாக யூ.என்.எச்.சி.ஆர் தெரிவித்துள்ளது. (ஏபி)
- பாஸ்டன் செல்டிக்ஸ் அணி 2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிளில் வெற்றிபெற்றது. [1]
- ஜூன் 16: சாட் தீவிரவாதிகள் தலைநகர் உஞ்சமீனா நோக்கிய நகர்வின் போது பில்ட்டைன் என்ற நகரைக் கைப்பற்றினர். (பிபிசி)
- ஜூன் 15: நேபாளத்தில் 240 ஆண்டு கால மன்னராட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து மன்னர் ஞானேந்திரா வசித்து வந்த நாராயண்ஹிதி அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. (தமிழ்முரசு)
- ஜூன் 14:
- நாசாவின் டிஸ்கவறி ஸ்டிஎஸ்-124 என்ற தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமி திரும்பியது. (நாசா)
- ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற ஒரு குண்டுவெடிப்பில் 4 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். (அசோசியேட்டட் பிரஸ்)
- ஜப்பானில் ஹொன்சூ தீவில் இடம்பெற்ற 6.8 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூன் 13:
- அமெரிக்கப் புரட்சியின் போது 1780 ஆம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 22-பீரங்கிகள் பொருத்தப்பட்ட ஒண்டாரியோ என்ற போர்க்கப்பலின் பகுதிகள் ஒண்டாரியோ ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது. (யாஹூ செய்திகள்)
- ஆப்கானிஸ்தானில் கண்டகாரில் உள்ள ஒரு சிறைச்சாலையை தலிபான்கள் தாக்கி தமது 390 உறுப்பினர்கள் உட்பட 1,150 கைதிகளை தப்ப வைத்தனர். (ராய்ட்டர்ஸ்)
- ஜூன் 11:
- நேபாளம் குடியரசானதை அடுத்து அந்நாட்டை 240 ஆண்டு காலமாக ஆட்சிசெய்து வந்த ஷா வம்சத்தின் கடைசி மன்னரான கயனேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறினார். (தினக்குரல்)
- கியூபாவில் ஒரே தொழில் செய்பவர்கள் சமமான ஊதியம் பெறும் முறை ஒழிக்கப்பட்டு அவர்களின் உற்பத்தித்திறனுக்கு ஏற்ப ஊதியம் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. (மியாமி ஹெரால்ட்)
- பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்புறத்தில் அமெரிக்க வான் தாக்குதலில் குறைந்தது 10 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அரசு இத்தாஅகுதலைக் கடுமையாக விமரிசித்துள்ளது. (பிபிசி)
- ஜூன் 8:
- 2008க்கான பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் பந்தய ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ரஃபாயெல் நடால் வெற்றி பெற்றார். (பிபிசி)
- தெற்கு கிரேக்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். பல கட்டிடங்கள் சேதமடைந்தன. (சிஎன்என்)
- ஜூன் 3: கச்சதீவு அருகில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் சுட்டதில் ஒரு மீனவர் கொல்லப்பட்டார். (தினமலர்)
- ஜூன் 2: புவேர்ட்டோ ரிக்கோவில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலரி கிளின்டன் வெற்றி பெற்றார். ஆனாலும் மொத்தத்தில் பாரக் ஒபாமா முன்னிலையில் உள்ளார். (மக்கள் முரசு), (விஓஏ)
- ஜூன் 1:
- தெற்கு ஈராக்கில் இருந்து 500 அவுஸ்திரேலியப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- மும்பாயில் நடந்த ஐ.பி.எல் துடுப்பாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. (ஃபொக்ஸ் ஸ்போர்ட்ஸ்)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- ஜூன் 22:
- வவுனியா பாலமோட்டையில் இலங்கைப் படையினரின் மும்முனை நகர்வு முறியடிக்கப்பட்டதில் 18 படையினர் கொல்லப்பட்டு 31 பேர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலையடுத்து இலங்கைப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டு 10-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (புதினம்)
- ஜூன் 21:
- கொழும்பு, தெகிவளையில் தமிழ் இளைஞர் ஒருவர் வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்டார். (புதினம்)
- மன்னாரில் கடந்த 2 நாட்களில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலங்களாக மீட்கப்பட்டனர். (புதினம்)
- ஜூன் 20: இந்தியாவின் வெளியுறவு அமைச்சகச் செயலாளர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அடங்கிய உயர்மட்டக் குழு முன்னறிவிக்கப்படாத அவசர பயணத்தினை மேற்கொண்டு கொழும்பு வந்தது. (சண்டேடைம்ஸ்)
- ஜூன் 16: வவுனியாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட 12 இலங்கை காவல்துறையினர் கொல்லப்பட்டு 40 பேர் காயமடைந்தனர். (ஏஎஃப்பி)
- ஜூன் 15: முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஜூன் 13:
- கனடாவில் இயங்கும் உலகத் தமிழர் இயக்கம் அந்நாட்டு அரசினால் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. (தமிழ்நெட்)
- யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்து நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு ஒருவர் படுகாயமடைந்தார். (புதினம்)
- ஜூன் 11:
- வவுனியா மாவட்டம், குஞ்சுக்குளம் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறிகடிக்கப்பட்டதில் 19 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 23-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- மன்னார், எருக்கலம்பிட்டி இலங்கைக் கடற்படையினரின் கூட்டுப் படைத்தளம் கடற்புலிகளின் சிறப்பு அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டதாகவும், 10 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்), (டெய்லி மிரர்)
- ஜூன் 8:
- முல்லைத்தீவு, மணலாறுப் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் நான்கு முனைகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளைத் தாம் முறியடித்து 20-க்கும் அதிகமான படையினரைக் கொன்றதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- ஜூன் 6:
- மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காயினர். தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மாணவர்களை இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர். (புதினம்), (டெய்லி மிரர்)
- கண்டியில் பேருந்துக்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவவில் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டு 47 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜூன் 4: கொழும்பு, தெகிவளையில் தொடருந்துப் பாதை அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 18 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஜூன் 2:
- முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 6 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடியில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த எருவில்பற்று பிரதேச சபை உப தலைவர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். (புதினம்)
[தொகு] இறப்புகள்
- ஜூன் 6 - ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)
- ஜூன் 15 - தங்கம்மா அப்பாக்குட்டி, ஆன்மிகவாதி (பி. 1925)
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்