அரிஸ்டாட்டில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அரிஸ்டாட்டில் (Aristotle),(கிமு 384 - மார்ச் 7, கிமு 322) ஒரு கிரேக்கத் தத்துவஞானியாவார். பிளேட்டோவும், இவரும் மேலைத்தேசச் சிந்தனையில் மிகஅதிக செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள். இவ்விருவரும், சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். பிளேட்டோ, அரிஸ்டாட்டிலின் குரு. சாக்கிரட்டீசின்(கிமு 470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. மாவீரன் அலெக்சாண்டர் இவருடைய சீடர் ஆவார்.