பாப்பரசர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாப்பரசர் ,பாப்பாண்டவர் ( கிரேக்க இலத்தீன் மொழிகளில் தந்தை என பொருள்படும்) உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராவார்.இவர் உரோமையின் ஆயர்,இராயப்பரின் வழிவந்தவர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். பாப்பரசரின் காரியாலயம் Papacy என் அழைக்கப்படுகிறது. திருச்சபை மீது அவருக்குள்ள அதிகாரம் Holy See அல்லது Apostolic See என அழைக்கப்படுகிறது. முதல் பாப்பரசர்கள் இராயப்பரின் பிரதிநிதி (Vicar of Peter) என அழைக்கப்பட்டு வந்தனர். இப்போது கிறிஸ்த்துவின் பிரதிநிதி (Vicar of Christ) என அழைக்கப்படுகிறார். பாப்பரசர் என்ற பதத்துக்கு முன்னர் உரோமை ஆயர் என்ற பதமே பயன்பாட்டிலிருந்த்து.296-304 வரையா உரோமை ஆயராக இருந்த மார்சலினுஸ்(Marcellinus) பாப்பரசர் என்ற பெயரை தனக்கு முதன்முதலாக பயன்படுத்தினார்.