அம்பா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அம்பா இந்திய இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் ஒருத்தி. இவள் காசி அரசனின் மூத்த மகளாவாள். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகள் ஆவர். இவர்களுக்குச் சுயம்வரம் நடந்தபோது, அங்கிருந்த மன்னர்களையும், [இளவரசர்]]களையும் தோற்கடித்து, இம் மூன்று பெண்களையும், பீஷ்மர் அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் கூட்டிச் சென்றார். அவர், இப்பெண்களை அஸ்தினாபுரத்து மன்னனான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்காக சத்தியவதியிடம் ஒப்படைத்தார்.
அம்பா வேறொருவனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததால் விசித்திரவீரியன் அவளை மணந்துகொள்ளாமல் அவளது தங்கைகள் இருவரையும் மட்டும் மணந்து கொண்டான். அம்பா தான் விரும்பியவனை நாடிச் சென்றாள். அவளைப் பீஷ்மர் கூட்டிச் சென்றதனால் அவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். பீஷ்மரிடம் திரும்பி வந்த அம்பா, தன்னை மணந்து கொள்ளூமாறு பீஷ்மரை வற்புறுத்தினாள். மணமுடிப்பதில்லை என விரதம் பூண்டிருந்த பீஷ்மரும் அவளை மணம்செய்ய மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட அம்பா, அடுத்த பிறவியிலாவது பீஷ்மரைக் கொல்வது எனச் சபதம் செய்து இறந்துவிட்டாள். அவள் அடுத்த பிறவியில் துருபதனுக்கு மகனாகப் பிறந்தாள் என மகாபாரதம் கூறுகிறது. அவன் பெயர் சிகண்டி என்பதாகும். மகாபாரதப் போரில் பீஷ்மர் இறந்ததில் முக்கிய பங்கு வகித்தவன் இவனாவான்.
வியாசரின் மகாபாரதம் | |
---|---|
கதை மாந்தர் | |
குரு வம்சம் | மற்றவர்கள் |
சாந்தனு | கங்கை | பீஷ்மர் | சத்யவதி | சித்ராங்கதன் | விசித்திரவீரியன் | அம்பிகா | அம்பாலிகா | விதுரன் | திருதராஷ்டிரன் | காந்தாரி | சகுனி | சுபத்ரா | பாண்டு | குந்தி | மாத்ரி | தருமர் | பீமன் | அர்ஜுனன் | நகுலன் | சகாதேவன் | துரியோதனன் | துச்சாதனன் | யுயுத்சு | துச்சலை | திரௌபதி | இடும்பி | கடோற்கஜன் | அகிலாவதி | உத்தரை | உலுப்பி | சித்திராங்கதா | அம்பா | பார்பரிகா | பாப்புருவாகனன் |அரவான் | அபிமன்யு | பரீட்சித்து | விராடன் | கிருபர் | துரோணர் | அசுவத்தாமன் | ஏகலைவன் | கிரிதவர்மன் | ஜராசந்தன் | சாத்யகி | மயாசுரன் | துர்வாசர் | சஞ்சயன் | ஜனமேஜயன் | வியாசர் | கர்ணன் | ஜயத்திரதன் | கிருஷ்ணர் | பலராமர் | துருபதன் | இடும்பன் | திருஷ்டத்யும்னன் | சால்யன் | அதிரதன் | சிகண்டி |
மற்றயவை | |
பாண்டவர் | கௌரவர் | அஸ்தினாபுரம் | இந்திரப்பிரஸ்தம் | குருச்சேத்திரப் போர் | பகவத் கீதை |