ஆட்டுக்கல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆட்டுக்கல் என்பது கல்லினால் செய்யப்பட்ட மாவு அரைப்பதற்கு உதவக்கூடிய கருவியாகும். இதன் நடுப்பகுதி குழியாக இருக்கும். அதில் அரைக்கவேண்டிய தானியத்தைப் போட்டு குழவியைக் கொண்டு கையால் சுழற்றினால் குழியில் இருக்கும் தானியம் அரைபடும். இது பெரும்பாலும் இட்லி, தோசை போன்ற உணவுப்பண்டங்களை செய்வதற்குத் தேவைபடும் மாவை அரைக்கப் பயன்படுகிறது. குழியில் பொருத்தி சுற்றப் பயன்படும் சற்று நீண்டு உருட்டையாக இருக்கும் பகுதிக்குக் குழவி என்று பெயர். ஆட்டுக்கல்லும் குழவியும் பயன்படப் பயன்பட நாளடைவில் மழுமழுப்பாகிவிடும், இதனால், பொருட்கள் சரியாக அரைபடாது. எனவே, கல்தச்சர் ஒருவரைக் கொண்டு, உளியால் பொள்ளி நுண்ணிய சிறு சிறு குழிகள் ஆக்குவர் (பொள்ளுதல் = குழி இடுதல்). இதற்கு ஆட்டுக்கல் பொளிதல் என்று பெயர். ஆட்டுக்கல்லும் குழவியும் பொளிவதால் உராய்வு நன்றாக ஏற்படுவதால், பொருட்கள் நன்றாக அரைபடும்.