ஆர். கே. நாராயண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண் (10 அக்டோபர் 1906-13 மே 2001) ஓர் ஆங்கிலத்தில் எழுதிய இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். இவரின் உணர்ச்சிபூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமததைத் தழுவி எழுதப் பட்டவையாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நாராயணனின் ஆரம்ப வாழ்க்கை
அநேகமாக நாரயணனின் எழுத்துக்கள் சுவாமியும் அவரது நண்பர்களும் எனறு ஆங்கில்த்தில் பொருள் படும் Swami and friends இலேயே ஆரம்பித்து. இது மால்குடி என்னும் கற்பனைக் கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டது. இதே கற்பனைக் கிராமததையே பின்னணியாகக் கொண்டபோதும் ஒவ்வொன்றும் தனித்துவமானவை
[தொகு] பிறப்பு
ஆர்.கே.நாராயண் இலக்கம் 1 வெள்ளா வீதி, மைசூர், இந்தியா இல் 1906 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 8 உடன் பிறப்புகளில் 3 ஆவாதாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர் (இ)ராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் நாராயணசுவாமி. தென்னிந்திய மற்றும் இலங்கைத் தமிழ் வழக்கப் படி முதற்பெயரானது பெற்றோரின் பெயரே வருவதால் இவரது சகோதர்களும் முதற்பெயராக ஆர்.கே ஐயே கொண்டிருந்தனர் (உதாரணமாக ஆர்.கே.லக்ஷ்மன R.K.Laxman). இவரது முதற் பதிப்பாளரன ஹமிஷ் ஹமில்ரன் (Hamish Hamilton இவரது பெயர் பெரிது எனக்கருதி அதைக்குறுக்கும் ஆலோசனைப் படி ஆர்.கே கிருஷ்ணசுவாமி என அழைக்கப்பட்டார்.
[தொகு] குழந்தைப் பருவம்
நாராயணனின் தாயாரான ஞானாம்பாள் இவரது பிறப்பை அடுத்து சுகவீனமுற்றார் எனவே இவர் ஓர் மருத்துவத் தாதியூடாகப் பராமரிக்கப் பட்டார். தாயார் மீண்டும் தாய்மையடைந்ததால் இவர் சென்னையிலுள்ள அம்மணி என்றழைக்கப்படும் அம்மம்மாவின் வீட்டிற்கு அநுப்பப்பட்டார். இவர் தனது பதின்ம வயதுவரை அம்மம்மாவுடனும் மாமாவான ரீ.என்.சேஷாச்சலம் உடனும் வாழ்ந்து வந்தார். இவர் தனது சகோதரர்களியும் பெற்றோரையும் சந்திக்க ஒரு சில வாரங்களே செலவழிப்பார். நாராயண் தமிழ் மொழியையும் பாடசாலையில் ஆங்கிலத்தையும் கற்று வந்தார். நாராயணினின் சுயசரிதையான எனது நாட்கள் என்ற பொருள்படும் ஆங்கில நாவலான My Days இலில் பெற்றோரைப் பார்ப்பதற்காக மைசூர் வந்த போது கன்னட மொழிபேசும் கடைக்காரர்கள் உரையாடல்களைப் புரிய முடியாதிருந்தாகவும் பின்னரே இம்மொழியை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
[தொகு] கல்வி
8 வருடக்கல்வியை சென்னையில் அம்மம்மாவின் வீட்டிற்கு அருகில் உள்ள லியூத்திரனின் இலக்குப் பாடசாலையில் (Lutheran Mission School) முடிவடைந்த பின்னர். சிறிது காலம் CRC உயர் பாடசாலையில் முடிவடைந்த பின்னர். இவரது தகப்பனாரான ராசிபுரம் வெங்கட்ராம கிருஷ்ணசுவாமி ஐயர் மைசூரில் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்ட பின்னர் பெற்றோரிடமே சென்றுவிட்டார். ஆரம்பத்தில் பிரதான் புத்தகமானது சோர்வடையக் கூடியதாக இருந்ததால் ஆங்கிலத்தில் எழுதும் கல்லூரி அநுமத்தித் தேர்வில் சித்தியடையவில்லை எனினும் மீண்டும் முயற்ச்சி செய்து மைசூர் பல்கலைக் கழகத்தில் பட்டதாரியானார்.
[தொகு] எழுத்துதாளராக
[தொகு] ஆரம்பம்
ஓர் சில குறிப்பிடதக்க இந்திய ஆங்கில எழ்தாளர்களே இந்தியாவில் ஏறத்தாழத் தொடர்ந்து வசித்து வந்தனர். 1956 இல் ரொக்பெலர் அமைப்பின் அழைபின் பேரில் அமெரிக்கா சென்றார். இந்து ஆங்கிலப் The Hindu குறுங்கதைகளை எழுதினார். அத்துடன் நியாயம் (Justice) என்னும் சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் மைசூர் நிருபராகவும் சிறிதுகாலம் கடமையாற்றினார்
[தொகு] இலக்கிய வடிவம்
இவரது நாவல்கள் யாவும் இலகுவானதும் மெதுவானதுமான ஹாஸ்யம் நிறைந்தவை. இவரது கதாபாத்திரங்கள் யாவும் கிராமப் புறத்தையே சார்ந்தவை. சுவாமியும் அவரது நண்பர்களும் என்பதிலிந்தே அவரது எழுதாக்கங்கள் ஆரம்பித்தன். முதலில் இவரது நாவல்களைப் பிரசுரிக்க இயலாதிருந்தது. இறுதியாக நண்பரூடாக கிரகாம் கிறீனியிடம் ஆரம்ப வரைதலைக் காட்டினார். கிறீனி இதை மிக விரும்பி பிரசுரிப்பதற்கு ஏற்பாடு செய்தார். கிறீனி இவரது ஆக்கங்களை மிகவிரும்பிப் பாராட்டினார். இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைப் பின்பற்றி பல நாவல்களைப் பிரசுரித்தார். சில நாவல்கள் இவரது சுயசரிதையைப் பின்பற்றியவை. உதாரணமாக ஆங்கில ஆசிரியர் (The English Teacher) என்னும் நாவல் தனது இளம் மனைவியின் மரணத்தைப் தழுவியெழுதப் பட்டதாகும்.
நாராயணனின் ஆக்கங்கள் ஒவ்வொரு நாளும் சமுதாயத்தில் நடைபெறுவதைத் தழுவியதாகும். இவர் இந்துப் புராணக் கதைகளையும், நாட்டுக்கதைகளையும் கூறத் தயங்கவில்லை இவரது இத்தன்மையானது விமர்சிக்கப்பட்டபோதும் சிறந்த ஓர் எழுத்தாளராகவே கருதப் பட்டார்.
[தொகு] ஆர்.ேக.லக்ஷ்மன்
நாராயணனின் இளைய சகோதரரான ஆர்.கே.லக்ஷ்மன் இந்தியாவில் பிரபல் காட்டூன் சித்திரங்களை வரைவதில் பிரபலமானவர்.