பனாமாக் கால்வாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பனாமாக் கால்வாய் பசுபிக் பெருங்கடலையும் அத்திலாந்திக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இது அமைக்கப்பட முன்னர் கப்பல்கள் தென்னமெரிக்கக் கண்டத்தைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருதது. பதினாறாம் நூற்றாண்டிலேயே இத்தகைய கால்வாய்க்கான யோசனை இருந்தது. 1880 இல் பிரெஞ்சுத் தலைமையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. 22000 தொழிலாளகள் இறந்த இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 1900களில் ஐக்கிய அமெரிக்கா மீண்டும் இப்பணியைத் தொடகி 1914 இல் பனாமாக் கால்வாய் திறக்கப்பட்டது. பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27,500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கால்வாய் 78 கி.மீ நீளமானதாகும்.