கண்டி நடனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிங்களவர் பண்பாடு |
|
சிங்கள மொழி |
|
தொகு |
கண்டிய நடனமானது சிங்களவர்களது கலாச்சாரத்தை பறைசாற்றும் ஒரு பாரம்பரியமிக்க கலை வடிவமாகும். பல நூற்றாண்டுகளாக சிறப்பான முறையில் ஆடப்பட்டுவருகின்றது. இந்நடனமானது சிங்களவர்களது புனித கலாச்சார நிகழ்வுகளின் போது தவறாது ஆடப்படும். 16-19 நூற்றாண்டுகளில் வாழ்ந்த கண்டி அரசர்களால் இதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. இந்திய கதகளி பாணியை ஒத்த இந்நடனத்தின் இந்து புராணக் கதை (hindu mythological), புராண நாயகர்கள், மிருகங்களின், நடத்தைகள் ஆடப்படுகின்றது. கண்டி பெரஹரவில் ஒரு அங்கமாக இந்நடனம் இடம்பெறும். கண்டி நடனமாடுபவர்கள் தலையில் குஞ்சத்துடன் கூடிய முடியும், உடலெங்கும் பலவிதமான நகைகள் அணிந்திருப்பர்.