ஜோதிர்லிங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜோதிர்லிங்கம் என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக ஜோதிர்லிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிர்லிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
[தொகு] 12 ஜோதிர்லிங்கத் தலங்கள்
- சோம்நாத், பிரபாஸ் பட்டன், சௌராஷ்டிரா, குஜராத்.
- மல்லிகார்ஜுனா, குர்நூல், ஆந்திரப் பிரதேசம்.
- மகாகால், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
- ஒங்காரேஸ்வரர், மத்தியப் பிரதேசம்.
- கேதார்நாத், உத்தரகாண்டம்
- பீமாசங்கர், சகியாத்திரி, மகாராஷ்டிரா.
- வாரணாசி, உத்தரப் பிரதேசம்.
- திரிம்பகேஸ்வரர், நாசிக், மகாராஷ்டிரா.
- வைத்தியநாதர், தேவ்கர், ஜார்க்கண்ட்.
- நாகேஸ்வரர் கோயில், துவாரகை, குஜராத்.
- இராமேஸ்வரம், தமிழ் நாடு
- கிரிஸ்னேஸ்வரர், ஔரங்கபாத், மகாராஷ்டிரா.